بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على سيدنا محمد
لا نبي بعد وعلى اله واصحابه نجوم سماء الهدى
ومن تبعهم من الجن والانس
நபி (ஸல்) அவர்களின் பிறப்பின் சிறப்பு
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. சாந்தியும், சமாதானமும் நமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய நேர்வழியின் வழிகாட்டும் நட்சத்திரங்களாகத் திகழும் அவர்களின் தோழர்கள் மீதும், ஜின்களிலும், மனிதர்களிலும் அவர்களைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகுக..
இம்மை, மறுமையின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக இறைவன் அனுப்பிய தூதர்களில் இறுதியாக அனுப்பப் பெற்றவர்கள் தான் புகழப்படுபவர் (அவர்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக) என அழைக்கப் படும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறைவன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் உலக இறுதி நாள் வரை வழிகாட்டியாக அனுப்பிய முன்மாதிரி மனிதர்.
ஒருவரை இன்னொருவர் பின்பற்ற வேண்டும் எனில், பின்பற்றுபவரை விட பின்பற்றப் படுபவர் மேன்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பின்பற்றுதல் என்பதற்கே பொருள் இல்லாததாகி விடும். மனிதர்களும், மனிதர்கள் அல்லாத ஜின்களும் ஒரே ஒரு நபரை மட்டுமே இறுதிநாள் வரை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் எனில், அத்தகையவர் மற்றவர்களை விடப்பல விஷயங்களிலும் மேன்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்த வகையில் தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கும் நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பும் மற்ற மனிதர்களை விடச் சிறப்பானதாகவே அமைந்துள்ளது.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் ஆகிய அல்லாஹ் திருமறையில் கூறுவதாவது, اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سورة الأنعام » الآية 124 அவனது தூதுத்துவத்தை எங்கு வைக்கவேண்டும் என அல்லாஹ் மிகவும் அறிந்தவன், (அல்குர்ஆன், சூரா அன்ஆம்.124)
மன்னர் ஹிர்கல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அபூசுஃப்யானிடம் விசாரிக்கையில், அவரது வம்சம் உங்களில் எப்படிப்பட்டது? எனக் கேட்டார். அதற்கு அபூசுஃப்யான், அவர் எங்களில் மிகவும் உயர்ந்த வம்சத்தைச் சார்ந்தவர், எனப் பதில் அளித்த பொழுது அதைக் கேட்ட மன்னர் ஹிர்கல், ஆம், இறைத்தூதர்கள் உயர்ந்த வம்சத்தில் தான் அனுப்பப் படுகிறார்கள், எனப் பதில் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் ஆதமின் மக்களாகிய மனித குலத்திற்கும், ஜின்களுக்கும், அனைத்துப் படைப்பிற்கும் தலைவராக இம்மையிலும், மறுமையிலும் இருக்கிறார்கள். முஹம்மது-புகழப்படுபவர், அஹ்மது-மிகவும் புகழ் மிக்கவர், மாஹீ-(இறைநிராகரிப்பெனும் குஃப்ரை) அழிப்பவர், ஆகிப் – (அவருக்குப்பின் வேறொரு நபி இல்லாத) இறுதியானவர், அல்ஹாஷிர் – மனிதர்களை மறுமையில் தனது பாதங்களுக்கிடையே எழுப்புபவர், அல்மக்ஃபீ- அடிக்கு அடி பின்பற்றப்படுபவர், நபிய்யுர் ரஹ்மத் (இறையருளைப் பெற்றுத் தரும்நபி), நபிய்யுத் தவ்பா (பாவமன்னிப்பைப் பெற்றுத் தரும் நபி), நபிய்யுல் மல்ஹமா - இறைநிராகாரிப்பை எதிர்க்கும் யுத்தகளங்களின் நபி, ஃகாத்தமுன்னபி - நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையான நபி என்றெல்லாம் பல வித சிறப்புப் பெயர்களைத் தாங்கியவர்கள் நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.
الحمد لله والصلاة والسلام على سيدنا محمد
لا نبي بعد وعلى اله واصحابه نجوم سماء الهدى
ومن تبعهم من الجن والانس
நபி (ஸல்) அவர்களின் பிறப்பின் சிறப்பு
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. சாந்தியும், சமாதானமும் நமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய நேர்வழியின் வழிகாட்டும் நட்சத்திரங்களாகத் திகழும் அவர்களின் தோழர்கள் மீதும், ஜின்களிலும், மனிதர்களிலும் அவர்களைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகுக..
இம்மை, மறுமையின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக இறைவன் அனுப்பிய தூதர்களில் இறுதியாக அனுப்பப் பெற்றவர்கள் தான் புகழப்படுபவர் (அவர்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக) என அழைக்கப் படும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறைவன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் உலக இறுதி நாள் வரை வழிகாட்டியாக அனுப்பிய முன்மாதிரி மனிதர்.
ஒருவரை இன்னொருவர் பின்பற்ற வேண்டும் எனில், பின்பற்றுபவரை விட பின்பற்றப் படுபவர் மேன்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பின்பற்றுதல் என்பதற்கே பொருள் இல்லாததாகி விடும். மனிதர்களும், மனிதர்கள் அல்லாத ஜின்களும் ஒரே ஒரு நபரை மட்டுமே இறுதிநாள் வரை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் எனில், அத்தகையவர் மற்றவர்களை விடப்பல விஷயங்களிலும் மேன்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்த வகையில் தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கும் நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பும் மற்ற மனிதர்களை விடச் சிறப்பானதாகவே அமைந்துள்ளது.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் ஆகிய அல்லாஹ் திருமறையில் கூறுவதாவது, اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سورة الأنعام » الآية 124 அவனது தூதுத்துவத்தை எங்கு வைக்கவேண்டும் என அல்லாஹ் மிகவும் அறிந்தவன், (அல்குர்ஆன், சூரா அன்ஆம்.124)
மன்னர் ஹிர்கல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அபூசுஃப்யானிடம் விசாரிக்கையில், அவரது வம்சம் உங்களில் எப்படிப்பட்டது? எனக் கேட்டார். அதற்கு அபூசுஃப்யான், அவர் எங்களில் மிகவும் உயர்ந்த வம்சத்தைச் சார்ந்தவர், எனப் பதில் அளித்த பொழுது அதைக் கேட்ட மன்னர் ஹிர்கல், ஆம், இறைத்தூதர்கள் உயர்ந்த வம்சத்தில் தான் அனுப்பப் படுகிறார்கள், எனப் பதில் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் ஆதமின் மக்களாகிய மனித குலத்திற்கும், ஜின்களுக்கும், அனைத்துப் படைப்பிற்கும் தலைவராக இம்மையிலும், மறுமையிலும் இருக்கிறார்கள். முஹம்மது-புகழப்படுபவர், அஹ்மது-மிகவும் புகழ் மிக்கவர், மாஹீ-(இறைநிராகரிப்பெனும் குஃப்ரை) அழிப்பவர், ஆகிப் – (அவருக்குப்பின் வேறொரு நபி இல்லாத) இறுதியானவர், அல்ஹாஷிர் – மனிதர்களை மறுமையில் தனது பாதங்களுக்கிடையே எழுப்புபவர், அல்மக்ஃபீ- அடிக்கு அடி பின்பற்றப்படுபவர், நபிய்யுர் ரஹ்மத் (இறையருளைப் பெற்றுத் தரும்நபி), நபிய்யுத் தவ்பா (பாவமன்னிப்பைப் பெற்றுத் தரும் நபி), நபிய்யுல் மல்ஹமா - இறைநிராகாரிப்பை எதிர்க்கும் யுத்தகளங்களின் நபி, ஃகாத்தமுன்னபி - நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையான நபி என்றெல்லாம் பல வித சிறப்புப் பெயர்களைத் தாங்கியவர்கள் நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.
No comments:
Post a Comment