“நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்று பிறந்தார்கள். ஒரு அரபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் திங்கட்கிழமை நோன்பு வைப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்? என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அன்றுதான் நான் பிறந்தேன், அன்று தான் என் மீது வஹ்யீ இறக்கப்பெற்றது எனப் பதில் அளித்தார்கள்”. அறிவிப்பவர்-அபுகதாதா (ரலி) நூல்- முஸ்லிம்
“நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்றே பிறந்தார்கள். திங்கட்கிழமை அன்றே நபியாக அறிவிக்கப்பட்டார்கள். மக்காவிலிருந்து மதீனாவுக் அவர்கள் ஹிஜ்ரத் செய்ததும் திங்கட்கிழமை அன்றுதான். அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்ததும் திங்கட்கிழமை அன்றுதான். அவர்கள் இறப்பெய்தியதும் திங்கட்கிழமை அன்றுதான். அவர்கள் ஹஜருல அஸ்வத் கல்லை எடுத்துக் கொடுத்ததும் திங்கட்கிழமை அன்றுதான்”. அறிவிப்பவர்-இப்னு அப்பாஸ் (ரலி) நூல்-அஹ்மத்
இன்னும் சில அறிவிப்புகளில், நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டு என்று அழைக்கப்பெறும் ஆண்டில், ரபீஉல் அவ்வல் மாதம் பிறை பன்னிரண்டில் பிறந்தார்கள் என வந்துள்ளது. மற்றும் சில அறிவிப்புகளில் அவர்கள் பிறந்தது ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 18 என்றும் வந்துள்ளது. உதுமான் (ரலி) அவர்கள், குபாஃத் இப்னு அஷ்யம் (ரலி) அவர்களிடம், “நீங்கள் பெரியவரா அல்லது ரசூல் (ஸல்) அவர்கள் பெரியவரா?” என வினவினார்கள். அதற்கவர்கள், “ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் என்னை விடப் பெரியவர்கள். ஆனால், நான் பிறப்பில் அவர்களை விட முந்தியவன். நான் யானைகளின் சாணங்கள் பச்சை நிறத்தில் இருந்ததைக் கண்டுள்ளேன்”, எனக் கூறினார்கள். அறிவிப்பவர்- முஹம்மது இப்னு இஸ்ஹாக்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யானை ஆண்டு பிறந்தார்கள். அதன்பிறகு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு உக்காழ் எனும் சந்தை கூடியது. யானையாண்டிற்குப் பின் இருபத்தைந்து வருடங்கள் தொடக்க்கத்தில் கஃபத்துல்லாஹ் கட்டப்பட்டது. யானை ஆண்டிற்குப் பின் நாற்பதாண்டுகள் தொடக்கத்தில் ரசூல் (ஸல்) அவர்கள் நபியாக்கப் பெற்றார்கள். அறிவிப்பவ்ர்-யஃகூப். (பைஹகி)
No comments:
Post a Comment