Thursday, August 30, 2012

இருபதாம் ஆண்டுப் பயணத்தை தொடங்கும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்


இருபதாம் ஆண்டுப் பயணத்தை தொடங்கும்
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்

நவீன அரபி மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் எண்ணத்துடன், 1993 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் தொடங்கப் பெற்ற அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம், உலக வரலாற்றில் தனது இருபதாம் ஆண்டுப் பயணத்தை வெற்றியுடன் தொடர்கின்றது.

அரபு நாடுகளுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கு நவீன அரபி மொழி, அரபி தட்டச்சுப் பயிற்சினை அளித்துச் சான்றிதழ் அளிககத் தொடங்கிய முதல் நிறுவனம் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் ஆகும். 1995 முதல் அரபி கம்ப்யூட்டர் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தது.  இன்று வரை ஏறக்குறைய 2000க்கும் அதிகமான மாணவர்கள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் இருக்கும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், மன்பஉல் அன்வார், மிஸ்பாஹுல் ஹுதா, ரஹ்மானிய்யா, அரூஸிய்யா, மஹ்ளரா, ஜமாலிய்யா, இன்னும் பல அரபி மத்ரஸாக்களின் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தில் இணைந்து நவீன அரபு மொழி, அரபி கம்ப்யூட்டர், அரபு மொழி வணிகத் தொடர்பு,  அரபி மொழி பெயர்ப்புப் பயிற்சிகளைக் கற்றுத் திறமையாளர்களாக வெளி வருகின்றனர்.

ஸஹாரன்பூர், லக்னோ, பீஹார், குஜராத், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அரபி மத்ரஸாக்களில் இருந்து ஆலிம் பட்டம் பெற்று வந்த மாணவர்களும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தில் பயின்று வருகின்றனர்.  அனைத்து அரபுக் கல்லூரிகளில் இருந்தும் வெளியாகும் புதிய ஆலிம்கள் ஒன்று கூடும் சங்கமமாக அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் திகழ்வதில் பெருமை கொள்கின்றது.

ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் ஐரோப்பியர்களும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸில் இணைந்து அரபி மொழி கற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

இங்குப் பயிலும் மாணவர்களில் பலர் அரபு நாடுகளில் பணியாற்றி வருக்கின்றனர். 

அரபி மொழி, அரபி கம்ப்யூட்டர் இன்னும் அரபி மொழி வணிகத் தொடர்பு, அரபி-ஆங்கில மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில், 3 மாதம், 2 மாதம், 1 மாதத்திற்குள் கற்கும் வண்ணம் எளிமையான, அதே நேரத்தில் திறமையான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அரபியில் பல்கலைக்கழகப் பயிற்சிகளான அஃப்ளலுல் உலமா, எம்.ஏ, போன்ற பயிற்சிகளுக்கான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் அளித்து வருகின்றது. 

இணையத்தின் மூலம் உலகில் எங்கிருந்தாலும் அரபி மொழியைக் கற்கும் வண்ணம் ஆன்லைன் அரபி மொழிப் பயிற்சிகளை அளிப்பதிலும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கின்றது.

அத்துடன், மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உயர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை ஆலோசனைகளும் அளிக்கப்படுகின்றன.

அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸின் இன்னொரு மகத்தான பணி அரபி-ஆங்கில மொழி பெயர்ப்புச் சோலை. இதன் கீழ் அரபு நாடுகளுக்குச் செல்வோருக்குத் தேவையான விசா, சான்றிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றை மொழி பெயர்த்தல் ஆகியவை அடங்கும்.

இன்னும், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள், வணிகக் கடிதங்கள், பொருள்களைப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விவரகு குறிப்புப் புத்தகங்கள் ஆகியவற்றை அரபியில் மொழிபெயர்த்தல், அச்சிடுதல் போன்ற சேவைகளையும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் அளித்து வருகின்றது.

இவ்வாறு, கல்வி, தொழில் ஆகிய இரு துறைகளிலும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ நிறுவனம் தனது பங்கைச் சிறப்பான முறையில் ஆற்றி வருகின்றது.

அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் பணிகள் மூலம் பயன் பெற விரும்புவோர், விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கலாம்.

தொடர்பு முகவரி:

அ. அஹ்மது ஆரிஃப்
எம்.காம்., எம்.ஃபில்., அஃப்ளலுல் உலமா,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
255, சிந்து தெரு, ஷேக் அப்துல்லாஹ் நகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை 600087
தொலைபேசி-9884033731
மின்னஞ்சல்: info@arabicinstitute.in
இணையதளம்: www.arabicinstitute.in
Yahoo Messenger: arabicinstitute@yahoo.com

பட்டம் பெறும் உலமாக்கள், இனி என்ன செய்யலாம்? - (1)

பட்டம் பெறும் உலமாக்கள்,
இனி என்ன செய்யலாம்? - (1)

(இக்கட்டுரை அல்-இஸ்லாம்,  ஜனவரி, 2001 இதழில் வெளிவந்தது)

ஏழாண்டுகள் தொடர்நது கல்வி கற்று நீங்கள் இப்போது ஆலிம் என்னும் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்!

இப்பட்டம் உங்களை ...
- நபிமார்களுக்கு வாரிசாகவும்
- மக்களுக்கு வழிகாட்டிகளாகவும்
- இறையச்சமுள்ளோருக்கு இமாம்களாகவும்
- சமுதாயத்திற்கு ஊழியர்களாகவும்

ஆக்கியிருக்கும் பட்டமாகும்!

இப்பட்டத்தின் மதிப்பு, நீங்கள் மேற்கண்ட நான்கு விதத்திலும் சிறப்பாகச் செயல்படுவதில்தான் உள்ளது!

ஆனால், இதுவரை நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு ஓர் அடிப்படைக் கல்வி மட்டுமே! இதற்கும் மேல் உயர்கல்விகள் பல உள்ளன! உங்கள் வாழ்க்கை முழுதும் கற்கவேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன!




மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ வேண்டியவர்கள் அவர்களை விடத் தகுதிகளிலும் முன்னேறி இருக்க வேண்டும். 

உங்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகள் இங்குத் தரப்படுகின்றன:


  1. மார்க்கக் கல்வியிலேயே உயர்கல்வியைக் கற்றுக் கொள்வது.
  2. உலகக் கல்வியில் தற்காலத்திற்கு அவசியமாக இருக்கும் கல்விகளைக் கற்றுக் கொள்வது.
  3. மேற்கண்ட இரண்டுக்கும் வாய்பில்லை எனில், மார்க்கத்தின் வழிமுறைக்கு ஏற்ற ஒரு தொழிலில் ஈடுபடுவது
 
  1. மார்க்கக் கல்வியில் உயர்கல்வி
ஆலிம் கல்விக்குப் பின்னர் உள்ள ஃபாளில், தவ்ரா மற்றும் சிறப்பு (ஃகுஸூஸிய்யாத்) வகுப்புகளில் சேரலாம். நம் நாட்டில் பல மார்க்கக் கல்வி நிறுவனங்களில் இவ்வகை உயர்கல்விகள் அளிக்கப் பட்டு வருகின்றன. அங்குத் தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களைச் சேகரித்து, அவற்றில் சேர வேண்டும். 

  1. உலகக் கல்விகள்
ஒரு கல்வித் தகுதியைப் பெற்றுள்ளவர்கள், அதற்கு அடுத்த கல்வித் தகுதியைப் பெறுவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.  உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளவர்கள், எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும், எட்டாம் வகுப்பு படித்துள்ளவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும், பத்தாம் வகுப்பு படித்துள்ளவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

சில யோசனைகள்
  1. 8,10,12 ஆம் வகுப்புகளுக்குரிய தேர்வுகளை எழுத முயற்சிக்கலாம்.
  2. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் பல்கலைக் கழங்களில் அஃப்ளலுல் உலமா மற்றும் பிற பயிற்சிகளில் சேரலாம்.
  3. ஆங்கிலம், தமிழ், மற்றும் அரபி டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒவ்வொரு மொழியாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  4. கம்ப்யூட்டர் கல்வியில் சேரலாம். கம்ப்யூட்டரில் விண்டோஸ், எம்-எஸ் வோர்டு, எக்ஸல், பவர்பாய்ன்ட் இன்னும் பிற கம்ப்யூட்டர் பயிற்சிகளைக் கற்கலாம்.
  5. இதில் ஆங்கிலம்-அரபி இரண்டையும் கற்றுக் கொள்வது மிகமிகச் சிறந்தது.  அரபுநாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. உள் நாட்டிலும் வாய்ப்புகள் உள்ளன.
  6. ஆங்கிலம் பேச, எழுதக் கற்றுத் தரும் பயிற்சிகளில் சேரலாம்.
  7. தனியாக அல்லது உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம்.
இவ்வழிகளில் பட்டம் பெறும் உலமாக்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். 

எப்படி இருப்பினும், அவர்கள்...
நபிமார்களின் வாரிசு !
மக்களுக்கு வழிகாட்டிகள் !
இறையச்சமுள்றோருக்கு இமாம்கள் !
சமுதாயத்திற்கு உழியர்கள் !

எனச் செயல்படுவதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும!

இளம் உலமாக்கள் வளர்ந்து சிறக்க, வாழ்த்துக்கள்!

அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்., காம்., எம்.ஃபில்.,
இயக்குநர்,
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்.



Monday, August 20, 2012

வந்தது இன்றே ஈதுப் பெருநாள்! வாழ்த்தி மகிழ்வோம் வளமாய் இந்நாள்!

இல்லா தோர்க்குக் கொடுத் தளித்தும்
இருப்ப வர்கள் தானும் மகிழ்ந்தும்
வல்லோன் புகழைப் பாடித் துதிக்க
வந்தது இன்றே ஈதுப் பெருநாள்!
 
நல்லார் நயினார் முஹம்மதர் மேல்
நாளும் சொல்வோம் நன்மை ஸலவாத்
அல்லாஹ் அவன்துதி போற்றி உரைத்தே
வாழ்த்தி மகிழ்வோம் வளமாய் இந்நாள்!
 
பொல்லார் செய்யும் துன்பம் காத்தே
நல்லார் வழியில் சென்று தொடர்ந்தே
எல்லாம் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்தே
இருந்திடச் செய் எங்கள் ரப்பே!
 
வஸ்ஸலாம்.
 
துஆவுடன்,
தங்கள் துஆவை நாடும்,
அஹ்மது ஆரிஃப்
 

Friday, August 3, 2012

இப்லீஸ் மிஷின் தெரியுமா...?

இப்லீஸ் மிஷின் தெரியுமா...?


ஒரு நாள் அரபி தட்டச்சு பழக வேண்டும் என்று ஒருவர் நம்மிடம் வந்தார்.  இவ்வாறு வருபவர்கள், தங்களது இன்ஸ்டிடியூட்டில் என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்? பயிற்சிக் காலம் எவ்வளவு? கட்டணங்கள் எப்படி? என்று கேட்பது வழக்கம்.  அவ்வாறே அந்த நபரும் கேட்டார். 

எங்களது இன்ஸ்டிடியூட்டில் அரபி மொழி கற்றுத் தருகிறோம். அரபி டைப்ரைட்டிங், அரபி கம்ப்யூட்டர் பயிற்கள், அரபியில் கடிதம் எழுதுதல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத்தருகிறோம், என்று கூறி அப்பயிற்சிகளின் காலங்கள், கட்டணங்கள் முதலியவற்றையும் தெரிவித்தேன்.   அவற்றைக் கேட்டுக் கொண்ட அநத் நபர், இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி அளிக்கப்படும் அறையையும், அங்கு இருந்த பொருள்களையும் ஒவ்வொன்றாக நோட்டமிட்டார்.  அரபி டைப்ரைட்டிங் மிஷின்களுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில டைப்ரைட்டிங் மிஷின் மீது அவர் பார்வை பட்டது. 

அதனைப் பார்த்தவாறே நம்மிடம் ஒரு புதுமையான கேள்வியைக் கேட்டார்.

என்ன மௌலானா? இப்லீஸ் மிஷினிலும் தாங்கள் பயிற்சி அளிக்கிறீர்களா?

அந்தக் கேள்வி புதிதாக இருந்தாலும், அதன் பின் ஓர் அறியாமை இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.  உடனே, நான் அவரிடம், இப்லீஸ் மிஷினா? ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்? என்று கேட்டேன்.  பின் என்ன மௌலானா? இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மிஷின்தானே இது... அதை, அவ்வாறு கூறாமல் வேறு எப்படிக் கூறுவது என்றார்.  அவரிடம், நீங்கள் அரபி டைப்ரைட்டிங் கற்றுக் கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள் தானே? என்று கேட்டேன்.  ஆம், அதிலென்ன சந்தேகம்? என்றார்.  அப்படியா? உங்களது அரபி டைப்ரைட்டிங் மிஷினையும் இங்கிலீஷ்காரன் தான் கட்ணடுபிடித்தான் என்று நாம் கூறியவுடன் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது.  இல்லை மௌலானா. அப்படி இருக்காது. இருக்கவே இருக்காது, என்றார்.

நாம் அவரை அழைத்துக் கொண்டு போய், அரபி மிஷினில் ஒரு பகுதியைக் காட்டினேன். அதில் என்ன இருக்கிறது என்று படியுங்கள் என்றோம்.  அவர், “Made in Sweden”  என்று இருக்கிறது.  என்றார்.  நாம் அவரிடம் திருப்பிக் கேட்டோம், அப்படி என்றால் உங்கள் அரபி டைப்ரைட்டிங் மிஷினையும் இப்லீஸ்தான் கண்டு பிடித்துள்ளான், என்றோம்.  அவர் ஒன்றும் கூறவில்லை. அவரிடம் நான் அறிந்த ஒரு விளக்கத்தைக் கூறினேன்.

மௌலானா, உங்களுக்கு இருக்கின்ற இந்தச் சந்தேகம் எனக்கும் இருந்தது.  மௌலானா அப்துல் ஃபத்தாஹ் பாகவி ஜுஹூரி (அதிரை) அவர்களைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமே? என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், ஆம், அவர்களை நன்றாக எனக்குத் தெரியும். தற்போது அவர்கள் இல்லை, என்றார்.  அவரிடம், ஒரு முறை மௌலானா அப்துல் ஃபத்தாஹ் ஜுஹூரி அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொழுது அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.  மௌலானா, கருவிகளைப் பொறுத்த வரை எது ஹலால்? எது ஹராம்? என்று எப்படித் தெரிந்து கொள்வது? என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், குல்லு ஆலத்தின் முபாஹுன் இஃதா உஸ்துஃமில லில் ஃகைரி அதாவது நன்மையான காரியத்திற்குப் பயன்படக்கூடிய ஒவ்வொரு கருவியும் ஆகுமானது தான்.  இதுவே மார்க்கத்தின் விதி, என்று பதிலளித்தார்கள்.  நான் இதற்கு தலீல் ஆதாரம் என்ன? என்று கேட்டேன்.  அவர்கள், நான் தான் இதற்குத் தலீல். ஒவ்வொரு ஆலிமும் ஒரு தலீல் தான், என்று பதில் கூறினார்கள் என்று நான் அவரிடம் கூறி விட்டு அவர் முகத்தைப் பார்த்தேன்.  அவர் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.  அவர் கூறினார், இப்போது நான் புரிந்து கொண்டேன்.

அத்துடன் நான் நின்று விடவில்லை. அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு அஸ்மாக்கள் பெயர்கள் அதாவது அறிவுகள் அனைத்தையும் கற்றுத் தந்ததாக வஅல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா (அல்குர்ஆன்-2:31) மேலும், ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான், என அவனது வேதத்தில் கூறியுள்ளான்.  எனவே, மக்களுக்கு நன்முறையில் பயன் அளிக்கக் கூடிய இல்முகள் அனைத்தும் ஹலால்தான். அவை தீய விளைவை உண்டு பண்ணும் எனில் அவை தவிர்க்கப் பட வேண்டியவையே, என்று கூறினேன். 

ஆம், அது சரிதான் என்று கூறிய அந்த நபர் ஒரு புதிய அறிவைக் கற்றுக் கொண்ட தெம்பில் புறப்பட்டார்.

அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப்,  எம்.காம். எம்.ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
255, சிந்து தெரு, ஷேக் அப்துல்லாஹ் நகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை 600087

(இக்கட்டுரை அல் இஸ்லாம், ஜனவரி, 1998 மாத இதழில் வெளிவந்தது)